அம்பாறை மாவட்டம் – ரியாப்பப்பேடு கல்முனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை வீதி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.