வவுனியாவில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது வவுனியா பூவரசங்குளம் வேலங்குளம் கோவில்மோட்டை பகுதியில் நேற்று 10 மணியளவில் இக்கைதுசம்பம் இடம்பெற்றுள்ளது.
இன்று (03.01.2023) காலை 10 மணியளவில் குறித்த நபர் பதிவு செய்யப்படாத இடியன் துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூவரசங்குளம் வேலாங்குளம் கோவில்மோட்டை பொலிசார் வீட்டுக்குச் சென்ற போது, எவ்வித பதிவும் இன்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.