கனடாவில் உயர்கல்வி கற்கும் யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த தயாபரன் சுவேதிகா என்ற மாணவியின் நிதிப் பங்களிப்பில் மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைக் கழகத்தின் ஊடகவியலாளர் இ.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் என்.கிஷோர், கட்சியின் பிராந்திய இணைப்பாளர் உசந்தன், சமூக ஆர்வலர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.