முன்னாள் பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) கொழும்பில் உள்ள அப்போஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடெக்வே ஆண்டகையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சந்தித்ததுடன், அவருடன் சிறிது நேரம் உரையாடினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட புத்தகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பொன்றை வைத்து விட்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.