Saturday, April 27, 2024
Homeசினிமாஎனக்கு வந்த நோயை கட்டுபடுத்தாமல் விட்டால் இறப்பு கூட ஏற்படும் : Live ல் தனக்கு...

எனக்கு வந்த நோயை கட்டுபடுத்தாமல் விட்டால் இறப்பு கூட ஏற்படும் : Live ல் தனக்கு வந்த நோய் குறித்து கூறி அழுத சமந்தா!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் தனது உடல்நலப் பிரச்னை குறித்து முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார். அப்பதிவில் “’யசோதா’ டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் உறவும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து, குணமடைந்த பிறகு உங்களிடம் பகிரலாம் என்று நினைத்திருந்தேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இதன் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் சமந்தாவின் உடல்நிலைக் குறித்து பல்வேறு விஷயங்களைப் பரப்பி வந்தனர். இந்நிலையில் தெலுங்குப் படமான ‘யசோதா’வின் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நடிகை சமந்தா தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதைப் பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார். தனது உயிர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், தனது உடல்நிலை குறித்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய சமந்தா, “நான் எனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியது போல, சில நாள்கள் நல்லதாகவும், சில நாள்கள் கெட்டதாகவும் இருக்கும்.

சில நாள்கள் படுக்கையிலிருந்து எழுவதே கடினமாக இருக்கும். ஒரு அடி எடுத்து வைப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன். இங்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது நிலைமை உயிருக்கு ஆபத்தானது என்று விளக்கும் பல செய்திகளை நான் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான ஒரு நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் இறக்காமல்தான் இருக்கிறேன். அந்தத் தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை” என்று எமோஷனலாக பேசியிருக்கிறார் நடிகை சமந்தா.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments