வெளிமடை, சில்மியாபுர பகுதியில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. N.S. ஹமிதா என்ற பெண் இவ்வாறு உயிரிழந்தார்
சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்ட போதிலும், பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கெப்பிட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.