Saturday, May 11, 2024
Homeஇலங்கை செய்திகள்கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.

கிளிநொச்சி – பரந்தன், பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் 2 பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் நெல் உலரவிடப்படுகின்றமையே விபத்திற்கான காரணம் என சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments