Monday, April 29, 2024
Homeஇலங்கை செய்திகள்கொழும்பு - குதிரை பந்தய திடலில் இளம் யுவதியின் சடலம்!

கொழும்பு – குதிரை பந்தய திடலில் இளம் யுவதியின் சடலம்!

கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யுவதி ஒருவரின் சடலம் கொழும்பு 7 ரேஸ்கோர்ஸில் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டு காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கருவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments