தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை காதிபத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
இவர் 2004-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா துறையில் தடம் பதித்தார்.
பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த சந்தானம் தனது பாதையை மாற்றி ஹீரோவாக களமிறங்கி வெற்றி படங்களையும் கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் மக்கள் இடத்தில கலவையான விமர்சனமே பெற்றது.
இந்நிலையில் நடிகர் சந்தானம் Jai Badri Vishal என்ற இடத்திற்கு சென்றுள்ள அவர், அங்கு எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு, ‘சந்தானம் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார்’ என்று ரசிகர்கள் கமன்ட் செய்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.