ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் முகாமையாளரையும், அங்கு பணியாற்றிய இரு பெண்களையும் கைது செய்துள்ளனர்.
குறித்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் குருநாகலைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய பெண் பாயகலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு யுவதிகளும் 23 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.