Wednesday, May 15, 2024
Homeஇந்திய செய்திகள்சுக்குநூறாக நொறுங்கிய டெம்போ.. பலியான காளைகள்.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு முடிந்து திரும்பிய போது சோகம்!

சுக்குநூறாக நொறுங்கிய டெம்போ.. பலியான காளைகள்.. புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு முடிந்து திரும்பிய போது சோகம்!

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று டெம்போவில் திரும்பிய காளைகள், காளைகளின் உரிமையாளர் மூன்று பேர் அரசுப்பேருந்து மோதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுவிட்டு 3 காளைகள் உடன் மாட்டு உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் அடங்கிய 6 பேர் டெம்போ வேனில் விராலிமலை சென்றுள்ளனர்.

அப்போது திருவரங்குளம் அருகே உள்ள புஷ்கரம் காலேஜ் அருகே சென்ற போது டெம்போ வாகனமும் பட்டுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

அரசு பேருந்து மோதிய விபத்தில் மூன்று காளைகளும் வாகனத்தில் வந்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 2பேர் பலியான நிலையில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments