சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு நல்ல பலனைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முதலீட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விமானத்திலும் 90 சதவீதத்திற்கும் அதிகமான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வாரத்திற்கு நான்கு சேவைகள் உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.