நேற்றிரவு (31) சுழிபுரம் – பாண்டவத்தை பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பஸ்சின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அங்கு வந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.