உறவுகளைத் தேடிப் போராடும் ஜெனிதாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டிப்பதாக வடக்கு கிழக்கு காணாமல் போனோர் சங்கத்தின் தலைவர் கலரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிதாவின் வீட்டிற்கு சிலர் சென்று கழிவு நீரை வீசியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற்போனோர் சங்கத்தின் தலைவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையும், மேற்படி சம்பவத்தையும் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஈழத்துக்காக ஆயுதம் ஏந்தி போராடவில்லை” என்று கூறிய அவர், அரசு புலனாய்வாளர்கள் இப்படி அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வதைக் கண்டித்துள்ளார். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக போராடுகிறோம்.
இலங்கை அரசிடம் நீதி கேட்டு போராடினோம். நீதி கிடைக்காத காரணத்தால் சர்வதேச சமூகத்திடம் இருந்து நீதி கேட்டு போராடி வருகிறோம். இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.