யாழ்ப்பாணம் புத்தூர் நவக்கரி, மாதா கோவிலடியில் தாய்ப் பால் புரக்கேறி 30 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தாயிடம் பாலருந்திய போது திடீரென புரக்கேரியது உடனடியாக அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய தினம் குழந்தையின் 31ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் இறப்புச் சம்பவம் அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.