தேர்தல் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு வழங்க திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காரியாலயத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோசலிச இளைஞர் சங்கம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எதிராகவும், திட்டமிட்ட திகதியில் திகதி நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டம் காரணமாக சரண மாவத்தையும் முற்றாக மூடப்பட்டுள்ளது.