Saturday, April 27, 2024
Homeசினிமாதோழியின் கணவரை அபகரித்துவிட் விட்டேனா..?தனது திருமணம் குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த நடிகை ஹன்சிகா!

தோழியின் கணவரை அபகரித்துவிட் விட்டேனா..?தனது திருமணம் குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த நடிகை ஹன்சிகா!

தமிழ், தெலுங்கில் முன்னணி  நடிகையான ஹன்சிகா 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி அடையாளத்தைக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றது.

ஹன்சிகாவின் கணவர் சோஹேலுக்கு இது இரண்டாவது திருமணம் என்றும் ஹன்சிகா தனது தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்துகொண்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் சிறப்பு விருந்தினராக ஹன்சிகா கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதனையடுத்து தோழியின் கணவரை ஹன்சிகா அபகரித்துக்கொண்டாரா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஹன்சிகாவின் திருமணம் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் வெளியானது.

நிகழ்ச்சியில் பேசிய ஹன்சிகாவின் கணவர் சோஹேல், என் முதல் திருமணம் முறிந்ததற்கு ஹன்சிகா காரணமில்லை.

நானும் ஹன்சிகாவும் நண்பர்கள் என்பதால் அவர் எனது முதல் திருமணத்தில் கலந்துகொண்டார் என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஹன்சிகா, ”ஒருவரை முன்பே தெரியும் என்பதால் அவர்களது திருமணத்துக்கு நான் எப்படி காரணமாக முடியும் ? நான் சினிமாவில் இருப்பதால் என்னை வில்லனாக்கிவிட்டனர்” என தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments