இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 42 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கியது. எண்ணூர் துறைமுகம் மற்றும் சென்னையில் உள்ள EVP ஃபிலிம்சிட்டியில் பிரமாண்டமான செட்டில் சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், சமீபத்திய ஷெட்யூல் முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்கள் சூர்யா 42 படக்குழுவினர்.
மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் 3டி பீரியடிக் டிராமாவாக 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, ‘சூர்யா 42’ படத்தின் பீரியட் பகுதிகளுக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளதாம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023-க்குள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கும் சூர்யா 42 பீரியட் படம், சூர்யாவின் அதிக பட்ஜெட் படமாக இருக்கும். மேலும் அவர் இப்படத்தில் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘சூர்யா 42’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது