புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நான் எதுவும் கூறமாட்டேன், தலையிடமாட்டேன் என முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
குறித்த சந்திப்பில் புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.