Monday, May 6, 2024
Homeஇலங்கை செய்திகள்புதுக்குடியிருப்பில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; மூவர் காயம்.!

புதுக்குடியிருப்பில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; மூவர் காயம்.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பரந்தன் வீதியில் உள்ள பிரதேச சபை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக மூன்று வாகனங்கள் மோதியதில் இயந்திரத்தில் பணிபுரியும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று 22.01.23 அன்று காலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பிரதேசபை பொது விளையாட்டு மைதானத்தில் வருடாந்தம் நடைபெறும் விளையாட்டுப் போட்டியின் போது வீதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதுடன் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக வந்த இரண்டு வாகனங்கள், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் புதுக்குடியிருப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்படுத்திய இரு வாகனங்களின் சாரதிகள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments