Tuesday, May 7, 2024
Homeஇலங்கை செய்திகள்பெண் விவகாரத்தில் சிக்கிய தனுஸ்க பிணையில் விடுதலை : பெரும் தொகை செலுத்திய இலங்கை கிரிக்கெட்...

பெண் விவகாரத்தில் சிக்கிய தனுஸ்க பிணையில் விடுதலை : பெரும் தொகை செலுத்திய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

பெண்கள் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கிற்கு பிணை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் சங்கம் அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றிற்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது.

இதுதவிர இந்த தொகைக்கு கூடுதலாக அவருக்கு ஏராளமான உதவிகள் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடுமையான நிபந்தனைகளுடன் சிட்னி நீதிமன்றத்தினால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஸ்க குணதிலக், வடமேற்கு சிட்னியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இரவில் நடமாடவும், சமூக வலைதளங்கள் மற்றும் டிண்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனுஷ்க குணதிலக் 150,000 டொலர் ரொக்கப் பிணையில் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments