Wednesday, May 15, 2024
Homeஇலங்கை செய்திகள்மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பாகுகமிலுள்ள மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிக்கு எருவில் பகுதியைச் சேர்ந்த கே.ராதாகிருஷ்ணன் என்ற 65 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் மீது காயங்கள் காணப்பட்டதாகவும், அருகாமையில் விஷப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் எவ்வாறு இங்கு வந்துள்ளார் மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments