மண்வெட்டியால் அடிபட்டு பெண் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மஹாவிலாச்சி ஹெலம்பகஸ்வெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹலம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று 31ஆம் திகதி அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாவிளாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.