Sunday, April 28, 2024
Homeவன்னி செய்திகள்முல்லைத்தீவு செய்திகள்முல்லைத்தீவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஐயர் ! அதிர்ச்சியில் ஊர்மக்கள் !

முல்லைத்தீவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஐயர் ! அதிர்ச்சியில் ஊர்மக்கள் !

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு சிலாவதியில் மரண கிரியைகள் செய்து கொண்டிருந்த அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ ஐயர்) இவ்வாறு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த ஐயர், அவரது மனைவி மற்றும் உறவினர் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அய்யரின் கை, கால்களை கட்டி அய்யரின் மனைவி மற்றும் வயதான உறவினர் ஒருவரின் வாயைக் கட்டிய பின்னர் தாக்கியுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களும் முகத்தில் துணியுடன் வீட்டிற்குள் நுழைந்து கைகளில் வாள்கள் மற்றும் கத்திகளை எடுத்து வந்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பெரும் போராட்டத்துக்கு இடையே அவர்களை அவிழ்த்து விட்டு வெளியில் சென்று பார்த்தபோது அய்யர் இறந்து கிடந்தார்.

இதனால் பயந்துபோன அவர்கள், வீட்டின் முன்புறம் உள்ள கடைக்காரருக்கு தகவல் தெரிவிக்க, அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் கிடைத்தன.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஒன்றும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.சரவணராஜா நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் முல்லைத்தீவு – சிலாவத்தை பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கடந்த வாரம் ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் முல்லைத்தீவில் ஐயர் கொல்லப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அண்மைக்காலமாக தமிழர் பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments