Sunday, April 28, 2024
Homeசினிமாநடிகை சமந்தாவுக்காக கோவில் கட்டிய நபர்!

நடிகை சமந்தாவுக்காக கோவில் கட்டிய நபர்!

நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு கோவில் கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரை அடுத்த பாபட்லா மாவட்டத்தில் உள்ள ஆலபாடு கிராமத்தில் வசிக்கும் அவரது தீவிர ரசிகரான சந்தீப், சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்.

இந்த கோவில் திறப்பு விழா நாளை (ஏப்ரல் 28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சந்தீப் பேசுகையில்,

நடிகை சமந்தாவின் படங்களைப் பார்த்து தான் தீவிர ரசிகராக மாறவில்லை என்றும், நடிகை சமந்தா பிரத்யுஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மரியாதை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பதாகவும் சந்தீப் கூறினார். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை (ஏப்ரல் 28) திறப்பு விழா நடைபெறும் என சந்தீப் தெரிவித்தார்.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, கும்பாபிஷேகம், பாலாபிஷேகம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புவுக்கு முதன்முறையாக ரசிகர்கள் கோவில் கட்டிய பிறகு, நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, நமீதா, நீதி அகர்வால், மலையாள நடிகை ஹனி ரோஸ் போன்ற நடிகைகள் அவர்களது ரசிகர்களால் வணங்கப்பட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments