வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சுகிர்தனின் வீட்டின் முன்பாக தவறான தீர்மானம் எடுத்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லி ஆதார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று (17.04.2023) உயிரிழந்ததாக நமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு கணவரை பிரிந்து 10 வயது பெண் குழந்தை இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணுக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாகவும் அதன் காரணமாக நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அயலவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை வலி வடக்கு முன்னாள் தவிசாளரின் மனைவி நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் முன்னாள் தவிசாளர் சுகிர்தனை வாக்குமூலம் பெறுவதற்காகவும் அவருடைய பாதுகாப்பு கருதியும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு-கிழக்கில் அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டின் முன்னாள் ஒரு பெண் இவ்வாறு தவறான முடிவெடுத்தது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.