Saturday, May 11, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண்கள்!

யாழில் பரிதாபமாக உயிரிழந்த பெண்கள்!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் நேற்று மாலை காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்கள் மானிப்பாய் ரஞ்சித் மோட்டோர்ஸ் ஊழியர்களே உயிரிழந்துள்ளனர்.

கோப்பாயைச் சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26) மற்றும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கீதரட்னம் திவ்யா (வயது 31) ஆகிய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊர்க்காற்றுறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகிலுள்ள வளைவில் நேற்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

ஊர்க்காவல்துறையிலிருந்து வந்த கார், சாலையின் மத்திய வெள்ளைக் கோட்டைக் கடந்து, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

காரில் பயணித்த பருத்துறையைச் சேர்ந்த வடமராட்சி, சிவசுப்ரமணியம் சுதாகரன், கருணாமூர்த்தி விமலாதேவி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், சமீபகாலமாக விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் அவற்றின் வேகத்தில் கவனம் செலுத்துவது அவரது உயிரை மட்டுமல்லாது மற்ற உயிர்களையும் காப்பாற்றும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments