Thursday, May 16, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் மர்ம பொருளுடன் பெண் உட்பட இருவர் அதிரடி கைது!

யாழில் மர்ம பொருளுடன் பெண் உட்பட இருவர் அதிரடி கைது!

யாழ் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து, ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையில் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கஞ்சாவினை விற்பனை செய்த 28 வயதுடைய பெண்ணொருவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து 157 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments