Thursday, May 16, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ் சாவகச்சேரியில் இலஞ்சம் பெற மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ் சாவகச்சேரியில் இலஞ்சம் பெற மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்த பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தனது கடமையைசரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்மஞ்சுள செனரத் தெரிவித்தார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர் கடமையில் இருந்த பொலீஸ் சாஜனுக்கு 50ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்கமுற்பட்டுள்ளார்.

எனினும் குற்றச்செயலுடன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்துள்ளார். இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலீஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments