யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிபப் பெண்ணை வீட்டின் அறையில் அடைத்து வைத்து சல்லடை போட்டு வீட்டை சோதனையிட்ட நபரை கிராம மக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. மூதாட்டி ஒருவர் வசிக்கும் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அந்த மூதாட்டியை அறையில் வைத்து பூட்டிவிட்டு வீட்டை சோதனையிட்டுள்ளார்.
இதையடுத்து, அறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் அபாயக் குரல் எழுப்பியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் இருந்து ஒருவர் தப்பியோடிவிட்டார்.
அதன்பின், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறையில் மூதாட்டி பூட்டியிருப்பதை கண்டு, அவரை காப்பாற்ற அறையை திறந்து பார்த்தனர்.
மேலும், வீட்டில் இருந்து தப்பியோடிய நபரை ஊர் மக்கள் தேடிப்பிடித்து பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரது பையில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில பித்தளை பொருட்களும் சிக்கியது.
இதனையடுத்து, அயலவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்து கொள்ளையனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.