Monday, May 6, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் வீடொன்றில் இடம்பெற்ற படுகொலை ! 3 பெண்களும், 2 ஆண்களும் உயிரிழப்பு !

யாழில் வீடொன்றில் இடம்பெற்ற படுகொலை ! 3 பெண்களும், 2 ஆண்களும் உயிரிழப்பு !

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் தங்கியிருந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் 100 வயதான பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட மூதாட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்று காலை இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தில் 3 பெண்களும் 2 ஆண்களும் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பெண்ணும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments