யாழில் அரச உத்தியோகத்தர் தீவிர காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது யாழ் – கைதடியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் என்ற அரச உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த உத்தியோகத்தர் கோப்பாய் வைத்தியசாலையில் காச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டபோது செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.