தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (19.04.2023) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய தெய்வேந்திரசா பிரியா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். யுவதியின் மரணம் தொடர்பில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் அண்மைக் காலமாக இடம்பெற்ற இவ்வாறான தற்கொலை சம்பவங்களின் பின்னணி தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.