யாழ் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 50 வயதான ஒருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் வீட்டில் நின்ற அவர்களின் வளர்ப்பு நாய் கழுத்தில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நாய் பயத்தினால் வீட்டின் ஒரு மூலையில் சுருண்டு படுத்துள்ளதுடன் அதன் கண்களில் மிரட்சியும் தெரிகிறது.
நாய் தனது எஜமானர்களை காப்பாற்ற போராடிய போது நாய் மீது கொலையாளிகள் தாக்குதல் நடத்தி வெட்டி காயமேற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.