Sunday, April 28, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் !

வவுனியாவில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் !

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் இடம்பெற்ற ஆலய உற்சவத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் 29 வயதுமதிக்கத்தக்க நா.கபிலன் என்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்குறித்த ஆலய உச்சவத்தில் இரவு நேரத்தில் இளைஞர் கதவு இடுக்கில் உள்ள வயரொன்றினை கையில் எடுத்துள்ளார் இதன்போது மின்சார ஒழுகு இருக்கும் இடத்தில் அவரது கை பட்டமையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments