Sunday, April 28, 2024
Homeவன்னி செய்திகள்வவுனியா செய்திகள்வவுனியாவில் வீடு புகுந்து பெற்றோர் கத்தக் கத்த மாணவனைத் தாக்கிய கும்பல்!!

வவுனியாவில் வீடு புகுந்து பெற்றோர் கத்தக் கத்த மாணவனைத் தாக்கிய கும்பல்!!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து, 16 வயது மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த மாணவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (15) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இரு வேறு பிரபல பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு இடையே கடந்த சில நாட்களாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முரண்பாடு நிலவியது.

இவ்வாறு முரண்பட்டுக்கொண்ட இரு தரப்பு மாணவர்களும் 16, 17 வயதானவர்கள் ஆவர்.

இந்நிலையில் இரண்டு மாணவர்களின் மத்தியிலும் கைகலப்பு ஏற்பட்டபோது மாணவர் ஒருவரின் பெற்றோர் தலையிட்டு சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் நேற்று (15) மாலை வவுனியா, வேப்பங்குளத்தில் உள்ள குறித்த மாணவரின் வீட்டுக்குள் நுழைந்த மற்றைய மாணவர் உள்ளிட்ட சிலர், வீட்டிலிருந்த மாணவர் மீது தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் காயமடைந்த மாணவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments