கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பயணித்த காரை பொலிஸார் வழி மறித்த போதும் அவர் காரை நிறுத்தாமல் சென்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் யாழ் நவாலியை சேர்ந்த செ.கமலரூபன் (வயது – 36) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் துப்பாக்கி சூட்டு காயத்துடன் மன்னார் வரையில் சென்று மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.