கனடாவில் உள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சேர்ந்து வாங்கிய லாட்டரியில் அரை மில்லியன் டாலர்கள் வென்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஒன்டாரியோவில் வசிக்கும் சியோபன் குயின்லான், பார்பரா குயின்லான், டேவிட் குயின்லான், ஆண்ட்ரியா மெரிக், டேவிட் மெரிக் மற்றும் ஷானன் ஸ்டீல் ஆகியோர் சேர்ந்து லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.
தற்போது ஒரு நபருக்கு $83,333 கிடைத்துள்ளது. இலங்கைப் பணத்தில் சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய்.
இந்த மகிழ்ச்சியான செய்தியால் அதிர்ச்சி அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.