ஐ.நா மனித உரிமை பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடரை மையப்படுத்தி மிதிவண்டிப் பயணம் ஆரம்பித்துள்ளது.
பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நேற்று இரண்டு அணிகளாக
ஆரம்பித்த ஐ.நா மனித உரிமைப் பேரவை நோக்கிய மிதிவண்டிப் பயணம் இன்று ,நெதர்லாந்தின் றொட்ராம் நகரில் ஒரே அணியாக இணைந்து பிரேடா நகரம் நோக்கி பயணித்துள்ளது.
இந்தப் பயணத்தில் ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் தமிழின ஒடுக்குமுறைக்கு நீதிகோரப்பட்டுள்ளது.