விக்ரமன் சார்ந்த கட்சிக்காரர்கள் தனக்கு மிரட்டல் விடுப்பதாக பிக் பாஸ் வனிதா விஜயக்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தமிழுக்கும் அறிமுகமானது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
100 நாட்கள் நடக்கும் இப்போட்டியில் அனைத்து கடினமான தருணங்களையும் கடந்து இறுதிவரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவரே டைட்டில் வின்னராவார்.
தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் பிக் பாஸ் தமிழ் 6-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர்.
இதில் வெற்றி பெறப்போவது விக்ரமனா அல்லது அசீமா என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.
இதற்கிடையே விக்ரமன் சார்ந்திருக்கும் விசிக கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், பிக் பாஸ் போட்டியில் விக்ரமனை வெற்றி பெறச் செய்வோம் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது ஒருபுறம் ஆதரவையும், மறுபுறம் சர்ச்சையையும் கிளப்பியது.
திருமாவளவனின் ட்வீட்டை கோட் செய்து, “இது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட். மரியாதைக்குரிய அரசியல் தலைவரும், பதவியில் இருக்கும் எம்.பி.யுமான ஒருவர், ரியாலிட்டி ஷோவில் போட்டியிடும் போட்டியாளருக்கு வாக்களிக்க தனது கட்சி உறுப்பினர்களிடம் எப்படி சொல்லலாம்?” என்று கேட்டிருந்தார்.