வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவில்வத்தை கண்டியைச் சேர்ந்த 62 வயதான ஈ. சேகர் என்ற நபர் கடும் காய்ச்சல் காரணமாக இன்று (4) பிற்பகல் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.