பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர், பல பண மோசடியில் ஈடுபட்டு,
அதில் கிடைத்த பணத்தை வைத்து பல பாலிவுட் நட்சத்திரங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்ததாக தகவல் வெளியானது.
இவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி, நிக்கி தம்போலி போன்ற டாப் நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
குறிப்பாக பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஹோட்டல்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில் பாலிவுட் திரைவிமர்சகர் உமைர் சந்து, அவரின் ட்விட்டர் பக்கத்தில் ,
” நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கர்ப்பமாக இருந்தார். அவர் வயிற்றில் வளர்ந்தது சுகேஷ் சந்திரசேகரின் குழந்தை. பின்னர் ஜாக்குலின் கருக்கலைப்பு செய்து கொண்டார்” என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த ட்வீட் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது