கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் வேகமாக வந்த ரயிலுக்கு முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி செல்வி சுபகீர்த்தனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவி தற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று மாலை 5 மணியளவில் புகையிரதம் மோதுண்டு குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை உயிரிழந்த மாணவி இம் முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவியின் இழப்பானது கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.😥