Saturday, May 11, 2024
Homeசினிமாவிமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பிய வாரிசு இயக்குநர் !!சீரியல்னா சும்மாவா?

விமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பிய வாரிசு இயக்குநர் !!சீரியல்னா சும்மாவா?

படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று வாரிசு இயக்குநர் வம்சி விமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு கண்டனங்களையும், ஆதரவையும் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற வாரிசு படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவால் நல்ல வசூலைப் பெற்றுவருகிறது. இதன் காரணமாக வாரிசு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துவருவதாக கூறப்படுகிறது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய், படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்தார். சமீபத்தில் படத்தின் வெற்றிவிழாவும் கொண்டாடப்பட்டது.

வசூலில் வெற்றிப்பெற்றாலும் வாரிசு விமர்சன ரீதியாக அடிவாங்கி வருகிறது. அரைத்த மாவையே இயக்குநர் அரைத்து வைத்திருப்பதாகவும், டிவி சீரியல்போல இருப்பதாகவும் பலரும் கருத்து பதிவிட்டனர். தொடக்கம் முதலே இப்படியான விமர்சனங்களை கேட்டு வரும் இயக்குநர் வம்சி இது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments