இன்று (25) பிற்பகல் மன்னார் மடு பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாலையில் சீரற்ற காலநிலையின் போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
பத்மநாதன் தெய்வானை என்ற 62 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்